சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து  தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகத்திற்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 477 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 44 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 295 பேர் ஆண்கள், 182 பேர் பெண்கள்,

இன்று மட்டும் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,413 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 482 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 27 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.”

தற்போதைய நிலையில், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,275 ஆக  உள்ளது.  தமிழகத்தில் 254 அரசு மற்றும் தனியார்  கொரோனா  பரிசோதனை மையங்கள் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.