சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த  எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,444  ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்ததாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: 

அரியலுர் 1, செங்கல்பட்டு 136, சென்னை 1484,  கடலூர் 11,  தருமபுரி 2, திண்டுக்கல் 9, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 22, கன்னியாகுமரி 10, கரூர் 5,  மதுரை 15,  நாகை 1, பெரம்பலூர் 2, ராணிப்பேட்டை 2, சேலம் 3, சிவகங்கை 13, தென்காசி 3, தஞ்சாவூர் 10,  திருப்பத்தூர் 2, திருவள்ளூர் 78,  திருவண்ணாமலை 49,  திருவாரூர் 14, தூத்துக்குடி 28, திருநெல்வேலி 15,  திருச்சி 6, வேலூர் 13, விழுப்புரம் 10,விருதுநகர் 1,