சென்னை:

மிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பல பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல்ஆணையாளர் சத்தியபிரதா சாஹு, நெற்குன்றத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.