சென்னை:

மிழகத்தில்  22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில்  வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் கடந்த ஏப்ரல் 11ந்தேதி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மே 19ந்தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் அனைத்தும் கடந்த 23ந்தேதி எண்ணப்பட்டது. இதில் திமுக 14 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியது.

இவர்கள் பெயர்கள் அனைத்தும் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்க விரும்புவதாக  சட்டசபை செயலகத்திடம் தி.மு.க.  தலைமை தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேரும்  எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.  அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.‘

இன்று  நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்கும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு.செந்தில் பாலாஜிக்கு, கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்  ஜோதிமணி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.