சியோல்,

தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீன்பிடி படகு மோதியது. இதில் அந்த படகு நீரில் கவிழ்ந்து மூழ்கியது.

இது குறித்து உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 13 பேரில் உடல்கள் மீட்கப்பட்டது. நீரில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.