சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பா.ஜ., மற்றும் சுயேட்சைகள் தினகரன், விஷால், தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடும் அவர், வேட்புமனுவில் தன்னிடம் ரூ.1.06 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தீபா தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள், நகைகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.