சென்னை:

சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  மொத்த பாதிப்பு 38327  ஆக உயர்ந்துள்ளது.

bty

தமிழகத்தில், இன்று (19/06/2020 6 PM)  ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  54,449 ஆக அதிகரித்துஉள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1322 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில்  16,699 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை  21,098 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

சென்னையில் மட்டும் இதுவரை  529 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1630 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 41 பேர் உயிரிழந்த நிலையில்,  மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்: