சென்னை:
மிழகத்தில் இன்று  6,472பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது.  இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அதிக பட்சமாக  சென்னையில்,  1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  90,900 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 75,384 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,569  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.