ராமேஸ்வரம்:

டலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது தமிழக மீனவர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் வலைகளை அறுத்து எறிவதும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த சம்பவங்கள் சற்று ஓய்ந்து இருந்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்களது கைவரிசையை காட்டத்தொடங்கி உள்ளனர்.

மண்டபம்   பகுதியை மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 பேரையும் அவர்களது படகுகையும் சிறை பிடித்தனர்.

அதுபோல, கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடலோர காவல் படை, அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்த நிலை யில், பதிலுக்கு பதிலாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.