சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று  ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தம் 42,687  ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,487  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைபொருத்தவரை ராயபுரம் மண்டலத்தில் 5056 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டை- 3928, தேனாம்பேட்டை – 3652, கோடம்பாக்கம்- 3267, அண்ணாநகர் – 2960, திரு வி.க.நகர் – 2772 அடையாறு- 1725, வளசரவாக்கம்- 1338, திருவொற்றியூர்-1113 பேருக்கு கொரோனா உள்ளது.