சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5லட்சத்தை கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1.48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,585 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1228  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர்  மொத்த எண்ணிக்கை 1,35,215 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், , 10,393 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 2,976 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.