சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து  டிஐஜி சாமூண்டீஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில்,  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காலால்துறை இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்  மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி தாலுகா இன்ஸ்பெக்டராக கடந்த 7 மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்த மைனர்சாமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப்  காத்திருப்போர் பட்டியலிலும்,  அவரது இடத்துக்க சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல்  சத்தியவாணி, கீதாலட்சுமி உள்பட 3 பெண் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டு,  திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.