சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறையவே இல்லை. நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இப்போது 28 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாலில் 861 பேர் குணம் அடைந்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக 15,762 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் ஒரேநாளில் 12 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. 1,405 பேர், பிறமாநிலம், நாடுகளில் இருந்து வந்த 33 பேர் என மொத்தமாக1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 18,693லிருந்து 19,809 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.