புதுச்சேரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி பேசுவதற்காக ரோடியர் மில் திடலில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி நகரில் நாளை ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.