சென்னை:

சென்னையில் ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  144 தடை உத்தரவும் ஆகஸ்டு 31வரை  நீட்டிப்பு செய்து    சென்னை மாநகர  காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத் சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங் களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஆகஸ்டு 31ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு 7வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன் படி இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தபோடப்பட்ட 144 தடை உத்தரவு ஆகஸ்டு  31 ஆம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னையில் பொது இடங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் கூட தடை தொடருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.