சென்னை:

மிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாதொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  இன்று அதிகப்பட்சமாக  1458 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ள 1458 பேரில், 1146 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று மேலும் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 251  ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 633 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று 15,389  பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம்  5,50,643 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இன்று சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சாம்பிள்கள் 16,022  என்றும், இதில் 643 பேரின் சோதனைகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1638 பேர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.