சென்னை:

பெட்ரோல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை இன்று 14வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர்  ரூ.82.27, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.29 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும்  நிர்ணயம் செய்ய மத்திய அரசு  இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு  அனுமதி வழங்கியது முதல் பெட்ரோல் டீசல் விலை தினசரி மாற்றம் கண்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடந்த சில நாட்களாக ஒரே விலையில் நீடித்த நிலையில்,  கடந்த 14 நாட்களாக தொடர்ந்து, விலை உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.27, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.29 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மக்களிடையே கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை வாட்டி வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வும் மக்களை மேலும் வாட்டி வருகிறது.