சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய 15 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல் பணிக்காக, சென்னை போர்ட் டிரஸ்டில் உள்ள ஹவுசிங் காலனியில் இருந்து பீகார் மாநிலம் சென்றனர். அவர்களில் 64 பேர் கடந்த வாரம் பீகாரில் இருந்து சென்னை திரும்பினர்.

அவர்களில் 42 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அனைவரும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அறிகுறியில்லாமல் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மற்றவர்கள் போர்ட் டிரஸ்ட் காலனியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர் என்றும், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.