சிகாகோ: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் மிகப்பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. ஏழை நாடு, பணக்கார நாடு என்ற வேறுபாடில்லாமல். உலகளவில் இதுவரை 11.88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 64,103 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 6 இந்தியர்களும், இத்தாலியில் 5 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 பேரும், ஈரான் மற்றும் எகிப்தில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர். ஸ்வீடன் நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.