பாஸ்டன்:  அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. தினந்தோறும் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந் நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல செய்தித்தாளான பாஸ்டன் குளோப் டுடே என்ற பத்திரிகையில் 15 பக்கங்களுக்கு கொரோனாவால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது.

15 பக்கங்களிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுடன், இரங்கல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையானது மாசசூட்ஸ் பகுதியில் இருந்து வெளியாகிறது. அந்நகரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 38000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.