மும்பை

மும்பை ரெயில் நிலையத்தில் வதந்தி பரவியதால் நெரிசல் ஏற்பட்டு 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

எப்போதும் மக்கள் வெள்ளத்தில் இருக்கும் மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் எல்ஃபின்ஸ்டன் ரெயில் நிலையமும் ஒன்றாகும். இந்த எல்ஃபின்ஸ்டன் ரெயில் நிலையத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாக சற்று நேரம் முன்பு ஒரு வதந்தி பரவியது.    மக்களிடையே அந்த வதந்தி கடும் பதட்டத்தை ஏற்படுத்தியது.   உயிரைக் காத்துக் கொள்ள அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள்.  கடும் நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி சுமார் 15 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  ஆனால் உண்மையில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   மேலும் சுமார் 30 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.   ரெயில் நிலையத்திலும் சுற்றுப்புற பகுதிகளிலும் மக்கள் படும் பதட்டம் அடைந்துள்ளார்கள்.