சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

தினசரி 13 முதல் 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 8 ஆயிரத்து 500 காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.