லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயதேயான கோகோ காஃப் என்ற பெண், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர், தனது முதல் சுற்றுப் போட்டியில் 5 முறை விம்பிள்டன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தினார். பின்னர், தனது இரண்டாவது சுற்றில், இன்னொரு முக்கிய வீராங்கணையான மாக்டேலனா ரைபாரிகோவாவை வீழ்த்தி தற்போது மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கோகோ காஃப் கூறியுள்ளதாவது, “கடந்த 3 நாட்கள் ஆச்சர்யம் நிறைந்ததாக இருந்தன. நீங்கள் கடுமையாக உழைத்தால், எந்த இலக்கை அடைய வேண்டுமோ, அதை அடைவீர்கள். கடந்த வாரம், நான் இந்த இடத்தில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

என் மீது நான் எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால், எனக்கு இலக்குகள் உண்டு. அந்த இலக்குகள் என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கொள்ளப்பட வேண்டியவை” என்றார்.

விம்பிள்டன் போட்டியில் விளையாடும் மிக இளம் வயது வீராங்கணை காஃப் என்பது குறிப்பிடத்தக்கது.