ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும்  கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி,உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டி உள்ளது. அதுபோல இதுவரை  29.98 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கூட, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனாவால் 139,642,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,96,65,916 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 118,699,304 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,696 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 98 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  1,79,14,569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,06,703 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.