சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  6,74,802 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று 1148 பேருக்கு தொற்று உறுதியானதால், மாநிலதலைநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,667  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் 18 பேர் உயிர் இழந்ததையடுத்து, இதுவரை எ 3,473 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1257 பேர்  தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, இதுவரை  1,69,890 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதை யநிலையில், சென்னையில் 13304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.