சென்னை:
சென்னையில்  கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.    சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 80,761  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போதய நிலையில், 13,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று மேலும் 16 அபேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  4 பேரும், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 16 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.