புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒடிசாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணிநேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,87,099 ஆக அதிகரித்துள்ளது. 15,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,70,130 ஆகும். 13 பேர் பலியாக ஒட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்ந்துள்ளது.