டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.  குறிப்பாக, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

அதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் இந்தியாவிலும் வைரசால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

13,316 மாதிரிகள் 12,426 பேரிடம் இருந்து எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.