சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 1685 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 34ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய மொத்த பாதிப்பு 33,229-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 1685 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு  34,914 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,242 பேருக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24, 545 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 798 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை . 18,325 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 21 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 16,279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்ட  1,685 பேரில் 36 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.