சென்னை:

சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு உளளது. இதில் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.  சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  34245 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 15,257 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18565 ஆகவும் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 422 பேர் பலியாகி உள்ளனர்.

16.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 55% பேர் (18,565) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 5486 பேர், தண்டையார்பேட்டை – 4370 பேர், தேனாம்பேட்டை- 4143 பேர், கோடம்பாக்கம்- 3648 பேர், அண்ணாநகர்- 3431 பேர், திருவிக நகர்- 3041 பேர், வளசரவாக்கம்- 1444 பேர்,திருவொற்றியூர்-1258 பேர், அம்பத்தூர் -1190 பேர், அடையாறு – 1931 பேர், மாதவரம்- 922 பேர்,பெருங்குடி- 646 பேர், சோழிங்கநல்லூர்- 639 பேர், ஆலந்தூர்- 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.