சென்னை:
மிழகத்தில் நேற்று (16ந்தேதி)  புதிதாக 4549  பேருக்கு தொற்று  உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,56,369 ஆக உயர்நதுள்ளது.

சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 65,748 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,o38  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 ஆயிரம் பேரில் இதுவரை 65 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது சென்னையில் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் பாதிக்கப்பட்ட 82 ஆயிரம் பேரில் இதுவரை 65 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது சென்னையில் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகபட்சமாக ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.
மண்டலம் வாரியாக சிகிச்சை பெற்று வருவோா் விவரம்:
திருவொற்றியூா் 616மணலி 209மாதவரம் 419தண்டையாா்பேட்டை 848ராயபுரம் 1,141திருவிக நகா் 1,039அம்பத்தூா் 927அண்ணா நகா் 1,553தேனாம்பேட்டை 1,432கோடம்பாக்கம் 2,077வளசரவாக்கம் 744ஆலந்தூா் 476அடையாறு 1,017பெருங்குடி 331சோழிங்கநல்லூா் 377