கோவை:

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலியான நிலையில்,  வீட்டின் உரிமையாளர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சுவரின் மறுபுறம் பலர் சாதாரண  வீடுகள் கட்டி வசித்து வந்தனர். அங்கு பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட அரிப்பு காரணமாக   கருங்கல் சுவர் இடிந்து, மறுபுறத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்து அமுக்கியது. நள்ளிரவு நேரம் நடைபெற்ற இந்த விபத்தில், அந்த வீடுகளில் வசித்த வந்த சுமார் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள் .

இயற்கையின் இடர்பாடுகளால் ஏற்பட்ட இந்த விபத்து விவகாரம் ஜாதிய ரீதியிலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த கருங்கல் சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.