சென்னை:

மிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் வெகு குறைவாகவே உள்ளன. தமிழக மருத்துவர்களின் அயராத உழைப்பு காரணமாக, இதுவரை 44 கொரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று  ஒரே குடும்பத்தை  84 வயது பாட்டி உள்பட  3 பேர் குணமடைந்தனர். அந்த பாட்டி அவரது   மகள் (54) , பேரன் (25) உள்பட இன்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்தது.

கடந்தவாரம் டெல்லி தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  911 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குணமடைந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் குணமடைந்த மேலும் 14 பேர் டிஸ்சார் செய்யப்பட்டு உள்ளனர். இன்று மட்டும் 17 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.