ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக கட்டுக்குள் அடங்கா மல் இருந்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை 2.20 கோடியை தாண்டி யுள்ளது. அதே வேளையில் பலி எண்ணிக்கையும் 7.76 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின்  தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதுவரை  2,20,35,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை  1,47,75,237 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தும் உள்ளனர்.

அதேநேரத்தில், இதுவரை சிகிச்சை பலனின்றி  7,76,852 பேர்  உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில்  கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 54,288 பேருக்கு கொரோனா உறுதியானது.

அமெரிக்காவில்நேற்று ஒரே நாளில்  40,211 பேருக்கும் பிரேசிலில் 23,038 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,701,604 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்டிக  இந்தியாவில் 1,976,248 ஆகும். இந்தியாவில் 6,73,431 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,611,626; கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 173,710; கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,970,472.

உலகில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,363,235. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,478,494. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,08,654 ஆக உள்ளது. 3வது இடத்தில் இந்தியா உள்ளது.