பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கி 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் 1,800 கி.மீ தொலைவில் உள்ள சோங்கிங் நகரில் டயோஷுய்டோங் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

தொழிலாளர்கள் சுரங்கத்தில் பணியாற்றி கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதே சுரங்கத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.