சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக  கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவல் குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

மாநில தலைநகர் சென்னையில்நேற்று  993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால், சென்னையில் மட்டும்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  2,370 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் வரை 18  பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை 18 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேரும்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேர் மற்றும்  தனியார் மருத்துவமனை- 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.