மும்பை:
ராட்டிய மாநிலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
bload
நாடாளுமன்ற மேலவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் கஜ்பியே, நமது நாட்டில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மராட்டியத்தில் மட்டும் 276  பேர் அடங்குவர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்து அரசு எந்த ரத்த வங்கிகள் இந்த ரத்தம் ஏற்றும் பணியில் ஈடுபடுகின்றன என்பது பற்றி விசாரணை நடத்தியதா? என்று கேள்வி கேட்டார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி (மாநிலம்)  தீபக் சாவந்த்,
“கடந்த 1½ ஆண்டில் மட்டும் ரத்தம் ஏற்றியதன் மூலம், மாநிலத்தில் 182 பேர் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானார்கள்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
மேலும் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிகள் குறித்து உறுதியான தகவல் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.