சென்னை:

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது மீனவர்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை யினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக  குற்றம் சாட்டி வரும் இலங்கை தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல்  செய்து வருகிறது.  இந்த பிரச்சினை குறித்து இந்திய இலங்கை மீனவர்கள் மற்றும் அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் முடிவுபெற முடியாத நிலையே நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நெடுந்தீவு  பகுதியில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த  18 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை  காங்கேசன் முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.