சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,19,059-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும்  1097 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,04,455 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை   12,103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று  மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,501 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.