சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக மாநிலம் 1134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் இன்று  ஒரே நாளில் மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,04,650-ஆக அதிகரித்துள்ளது.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 1170 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 7,82,915 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும்  12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,954 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், 9,781 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில்,  இன்று 400-க்கும் குறைவான அளவே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.