சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 7வது நாளாக ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 30,152 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 13,503 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,146 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

அதேபோல் 4வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

இறந்த அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். உயிரிழப்பும் ஏழாவது முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொடர்ந்து பதிவாகியுள்ளது.  இன்று  15 ஆயிரத்து 309 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.