தூத்துக்குடி:

தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காண்பப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடல் அரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10,500 சதுர கி.மீ. பரப்பளவிலான மன்னார் வளைகுடா  பகுதியானது  கடல்வாழ் உயிரினங்கள் வாழ சிறந்த பகுதியாகவும்,  பல்வேறு அரிய வகை உயிரி னங்கள் வாழ்வதாகவும் ஏற்கனவே அறியப்பட்டது. இந்த பகுதிகளில் பவளப்பாறை கள் நிறைந்துள்ள இத்தீவுகளால் சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து இப் பகுதிகள் பாதுகாக்கப் படுகின்றன.

ஆனால் தற்காலிங்கள் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் இந்த தீவுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இயற்கை மாற்றம், பேரிடர் போன்ற காரணங்களால் தூத்துக்குடி பகுதியில் இருந்த விலங்கு சல்லி தீவு, கீழக்கரை பகுதியில் இருந்த பூவரசன்பட்டி உட்பட 2 குட்டி தீவு கள் கடலில் மூழ்கி விட்ட நிலையில், மேலும்,  19 தீவுகள் கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி, வேம்பார் கடல் பகுதிகளில், வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லதண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய 21 தீவுகள் உள்ளன.

இதில் தூத்துக்குடி பகுதியில் 4 தீவுகள், வேம்பாரில் 3 தீவுகள், கீழக்கரையில் 7 தீவுகள், மண் டபத்தில் 7 தீவுகள் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக கடல்சார் ஆராய்ச்சியாளரான சுகந்தி தே தாசன் மேற்கொண்ட ஆய்வறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது,

மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி பகுதியில் உள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளது. கீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் 43.49 சதவீதம், வேம்பார் பகுதியில் உள்ள தீவுகள் 36.21 சதவீதம், மண்டபம் பகுதியில் உள்ள தீவுகள் 21.84 சதவீதம் நிலப்பரப்பில் குறைந்து உள்ளன. விதிவிலக்காக மண் டபம் பகுதியில் உள்ள முயல் தீவு, மனோலி தீவு, சிங்கில் தீவு உள்ளிட்ட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

தீவுகளின் பரப்பு சுருங்குவதற்கு முக்கிய காரணமாக கடல் அரிப்பு உள்ளது. இந்நிலை தொடர்ந் தால் தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வரும் 2036க்குள் முழுமையாக கடலில் மூழ்கிவிடும்.

இதுபோல் வேம்பார் பகுதியில் உள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள் 2064 ஆண்டில் இருந்தும், கீழக்கரை பகுதியில் உள்ள ஆனையப்பர், வாலி முனை, பூவரசன்பட்டி உள்ளிட்ட தீவுகள் 2032 ஆண்டில் இருந்தும், மண்டபம் பகுதி யில் உள்ள மனோலி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் 2140 ஆண்டில் இருந்தும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நட வடிக் கை எடுக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

இதுகுறித்து வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா கூறுகையில், ‘‘மன்னார் வளை குடா கடலில் உள்ள தீவுகளை சுற்றி லும் பவளப்பாறைகள் உள்ளன. இந்த பாறைகளை மீனவர்கள் சேதப்படுத் தாமல் இருந்தாலே தீவுகள் அழியாமல் காப்பாற்றப்படும். மேலும் தீவுகளில், வனத்துறை சார்பில் வருடத் திற்கு 500 மரக்கன்றுகள் நட்டு வருகி றோம். ஆகவே தீவுகள் அழியாது.

மேலும் மீனவர்கள் பவளப் பாறைகளை சேதப் படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்’’ என்றார்.