லண்டன்:

ங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆக 19 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19 வயது இளைஞரான  இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர் தனது படிப்பை படித்துக் கொண்டே ‘ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும்  ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளார்.  அதற்காக அவருக்கு கிடைத்த லாபம் மட்டுமே 120 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இவரது நிறுவனம்  18-வது இடம் வகிக்கிறது.

தனது உறவினர் ஒருவரிடம் ரூ.7 லட்சம் கடனா வாங்கி தொடங்கிய இந்த நிறுவனம் 16 மாதங்களில் 1000 கோடி வர்த்தகத்தை எட்டியுள்ளது. தற்போது அவரது நிறுவனத்தில் 12 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், இவரது பெற்றோர்களான  தாயும் தந்தையும் காது கேளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகனின் அபார திறமை குறித்து அவர்கள் பெருமைகொள்வதாக கூறி உள்ளனர்.

இவரது வெற்றியை கண்டு,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில  இடம் வழங்க முடிவு செய்துள்ளது.