போபால்,

த்தியபிரதேசத்தில் தனது கம்பெனியில் வேலை பார்த்த  19வயது இளம்பெண்ணை தொழிற்சாலை உரிமை யாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், சாகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 19வயது இளம்பெண் அந்த தொழிற்சாலை உரிமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்  காவல் நிலையத்தில் புகார் கூறி உள்ளார். போலீசார் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக  தொழிற்சாலையின் உரிமையாளரிடம் போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு  டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியை நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.