சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 38 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக கொரோனா  பாதிக்கப்பட்டுள்ள 1974 பேரில் 1425 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று 1138 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 24,547  ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை  19,676 பேர்.