சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த  எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 30 பேர் பலியான நிலையில் மொத்த உயிரிழப்பு 397 ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியானவர்களில்  12 பேர் தனியார் மருத்துவமனையிலும், 18 பேர்  அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 8 நாட்களில் 165 பேர் உயிரிழந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை  தெரிவித்து உள்ளது.

இன்று மேலும் 1392 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23, 409 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6லட்சத்து 91ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.