திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாத காலத்தில் ரூ.16.73  கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. அந்த 1 காலத்தில் ரூ.16.73 கோடியும், 2 கிலோ தங்கமும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில் சிங்கால் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதி கோவில் வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட  1 மாதத்தில் 2.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
உண்டியலில் ரூ.16.73 கோடி, 2 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்து உள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் 3,569 பேருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் 91 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்று கூறினார்.