ஐதராபாத்:

அரசின் செயல்பாடுகளை இன்டர்நெட் மூலம் செயல்படுத்துவது குறித்த 21-வது தேசிய மாநாடு ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கிறது.

இதில் மத்திய உணவுத்துறை இணை அமைச்சர் சி.ஆர் சவுத்திரி பேசுகையில், ‘‘23 கோடி ரேசன் கார்டுகளில் 82 சதவீத கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 2.95 கோடி போலி கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்’’ என்றார்.