ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது ரபிக் (வயது 5). முபாரக் மகன் முகமது அஜீஸ்.

இருவரும் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போதுஅங்கிருந்த குளத்தில் தவறி விழுந்தனர். இதை கண்டு அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.