சென்னை: புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அட்டை பெறும் வகையில் 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 13, 14தேதி (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி அமையுமிடங்களில்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிப்பேசி எண்ணை வழங்கியவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் இரண்டு நாட்கள்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி  வரும் 13, 14ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.